சென்னை: கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ (The Dark Heaven) திரைப்படம் செப்டம்பர் 18ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் சித்து, பிக் பாஸ் பிரபலங்களான தர்ஷிகா, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வித்தியாசமனா திரைக்கதையுடன் இந்த படம் உருவாகி உள்ளது.
சஸ்பென்ஸ் மற்றும் க்ரைம் த்ரில்லர் கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு தனி ஈர்ப்பு உண்டு. அந்த வகையில், திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் ‘தி டார்க் ஹெவன்’ (The Dark Heaven) திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம். தி டார்க் ஹெவன் கதை: ஒரு அமைதியான மாநகரத்தில் அடுத்தடுத்து நிகழும் மர்மமான கொலைகளுடன் படம் தொடங்குகிறது. இந்த வழக்கை விசாரிக்க ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி நியமிக்கப்படுகிறார். வழக்கமான கொலை வழக்காக நகரும் இந்த விசாரணை, அடுத்தடுத்த கட்டங்களில் யாரும் எதிர்பாராத பல திருப்பங்களை நோக்கி பயணிக்கிறது. குற்றவாளி யார் என்பதை கண்டறியும் முயற்சியில், அந்த அதிகாரியின் சொந்த வாழ்க்கையும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, இறுதியில் அந்த மர்மங்களை அவர் எவ்வாறு அவிழ்க்கிறார் என்பதே ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.



